பாலிவுட் நடிகை மவுனி ராய் திருமணம்

 

பாலிவுட் நடிகை மவுனி ராய் திருமணம்


இந்த பதிவு சம்மந்தாமாக ஏதேனும் சந்தேகங்கள் உங்களுக்கு இருந்தால் நீங்கள் எங்களை contact us page -ல் தொடர்புக்கொள்ளலாம் .


பாலிவுட் நடிகை மவுனி ராய்-க்கு நேற்று திருமணம் நடந்தது . மாடல் அழகியாகவும் , பாடகியாகவும் இருந்த மவுனி ராய் , ரன் என்ற இந்தி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார் . அதன் பிறகு அக்பர் , வால்டர் , கோல்டு , ரோமியோ , மேட் இன் சைனா , வேல்லி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

 

  .



. அடிப்படாயில் நடன கலைஞரான இவர் , பல படங்களில் ஓரு பாடலுக்கு ஆடியுள்ளார் . இவர் நடித்த ஹுந்தி தொடர்கள் தமிழில் டப் செய்யப்பட்டு ஓளிப்பாகி இருக்கிறது . மவுனி ராய் முதலில் நடிகர் கவுராவ் சோப்ராவை காதலித்து வந்தார் . அந்த காதல் முறிந்த பின்னர் , நடிகர மோகித் ரெய்னாவை காதலித்தார் . 

 



இந்த காதலும் முறிந்து விடவே , கடைசியாக துபாய் தொழில் அதிபர் சூரஜ் நம்பியாரை காதலித்தார் . சமீபத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக அறிவித்தனர் . மவுனி ராயின் மற்ற காதலன்கள் போன்று இதுவும் முறிந்து விடும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பாத்து கொண்டிருந்த போது சூரஜ் நம்பியாரை நேற்று திருமணம் செய்து கொண்டார் மவுனி ராய் .

 



கோவாவில் உள்ள நட்சத்திர ௐட்டலில் நடந்த திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் , நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர் . மலையாள மற்றும் பெங்காலி முறைப்படி திருமணம் செய்து கொண்டனர் .



 

சமந்தா பற்றி கமென்ட் நாகார்ஜூனா மறுப்பு 

 



சமந்த பற்றி தான் கூறியதாக வந்த தகவல் பொய்யானது என நாகார்ஜூனா மறுத்துள்ளார் . நாகார்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யா , நடிகை சமந்தா ஆகியோர் தங்களது திருமண உறவை முறித்துக்கொண்டனர் . இது குறித்து கருத்து தெரிவித்த நாகார்ஜூனா , இந்த முடிவு துரதிஷ்டவசமானது . இருவரும் பிரச்சனைகளை பேசி தீர்த்து இருக்கலாம் என கூறியிருந்தார் . 



இந்நிலையில் 'கடந்த 2021-ஆம் ஆண்டு புத்தாண்டுக்கு பிறகுதான் நாக சைதன்யா , சமந்தா இடையே பிரச்சணை ஏற்பட்டது . விவகாரத்தை முதலில் கேட்டது சமந்தா தான் ' என நாகார்ஜூனா நேற்று முன் தினம் சொன்தாக சில மீடியாவில் தகவல் வந்தது . 

 


இது குறித்து நாகார்ஜுனா டிவிட்டரில் கூறியிருப்பதாவது : சைதன்யா , சமந்தா பற்றி நான் சொல்வதாக எலெக்டாரானிக் மீடியாவிலும் சமூக வலைதளத்திலும் ஓரு செய்தி வெளியானது . அது முழுக்க பொய் , அப்படி ஓரு கருத்தை நான் சொல்லவே இல்லை . வதந்திகளை செய்தியாக போடுவதை தவிர்க்க வேண்டும் . இவ்வாறு நாகாரிஜுனா கூறியுள்ளார் . 

மும்பை நட்சத்திர ஓட்டல் மீது நடிகை புகார் 

 


 

 

மலையாளத்தில் ஓரு அடார் லவ் படம் முலம் சினிமாவில் அறிமுமானவர் பிரியா பிரகாஷ் வாரியார் . தெலுங்கில் செக் படத்தில் நடித்தார் . இந்தி படத்தில் நடிப்பதற்காக மும்பையில் கோர்காவ்ன் பகிதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரியா தங்கியிருந்தார் .



 

 

அப்போது ஓட்டலில் நடந்த ஓரு சம்பவத்தை பற்றி அவர் புகார் கூறியுள்ளார் . இது குறித்து சமுக வலைதளத்தில் பிரியா கூறியிறுப்பதாவது : மும்பையில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு இரவு ஓட்டலுக்கு திரும்பிக்கொண்டிருந்தேன் . வழியில் உள்ள ரெஸ்ட்டாரண்டில் எனக்கான இரவு உணவை வாங்கினேன் . அதை எடுத்துக்கொண்டு ஓட்டலுக்கு சென்றால் , அங்கிருந்த ஊழியர்கள் என்னை தடுத்தனர் . வெளியில் இருந்து கொண்டு வந்த உணவை ஓட்டலுக்குள் செல்ல அனுமதி இல்லை என்றனர் . எனது அறையில் தானே சென்று சாப்பிட போறேன் என சொல்லியும் விடவில்லை .



 

 

இந்த உணவை ஓட்டலுக்கு வெளியே சென்று சாப்பிங்கள் , அல்லது குப்பையில் போடுங்கள் என்றனர் . இது எனக்கு அதிர்சியாக இருந்தது . உணவை வீணாக்க விருப்பம் இல்லை . வெளியே சென்று சாப்பிட்டு வந்தேன் . ஓட்டல் நிர்வாகத்தின் மனிதாபிமான மற்ற செயல் எனக்கு வியப்பை கொடுத்தது . இவ்வாறு பிரியா புகார் கூறியுள்ளார் .

 


இந்த பதிவு சம்மந்தாமாக ஏதேனும் சந்தேகங்கள் உங்களுக்கு இருந்தால் நீங்கள் எங்களை contact us page -ல் தொடர்புக்கொள்ளலாம் .






Post a Comment

0 Comments